Skip to main content

Posts

Showing posts from July, 2021

நா. முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

  நா . முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி   பாட்டொன்று   வேண்டு மென் றால் பசிதூக்கம் அறவே மறந்து போவார் மெட்டினை நினைவில் அசை போட்டு மெல்லிசை அதனில் கரைவ தற்கே இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு இனியதாய் புன்னகை சிந்திடு வாய் ! பூட்டிவைத்த இதயங் கொண்ட பேரும் பொன்னான உன்பாட்டில் கரைந்த னரே !   வெள்ளித் திரையதற்கு பாடல் போதுமென வான்திரைக்கு வந்ததுவே ஆசை கொஞ்சம் அள்ளித்தான் அணைத்ததே உன்னு யிரை ! ஆர்தான் பாடிடுவார் அன்னை அன்பினை அள்ளிதான் குவித்து வைத்தாய் அழகு ஆபரணமாய் தேசிய விருதுகள் தாமே வெள்ளித் திரைதான் மறந்தி டுமோ ? வையகம்தான் மறந்திடுமோ உன் பேரை !                         --- கே . அசோகன் ,