Skip to main content

நா. முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

 

ennathuli

நா. முத்துகுமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

 

பாட்டொன்று  வேண்டு மென் றால்

பசிதூக்கம் அறவே மறந்து போவார்

மெட்டினை நினைவில் அசை போட்டு

மெல்லிசை அதனில் கரைவ தற்கே

இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு

இனியதாய் புன்னகை சிந்திடு வாய்!

பூட்டிவைத்த இதயங் கொண்ட பேரும்

பொன்னான உன்பாட்டில் கரைந்த னரே!

 

வெள்ளித் திரையதற்கு பாடல் போதுமென

வான்திரைக்கு வந்ததுவே ஆசை கொஞ்சம்

அள்ளித்தான் அணைத்ததே உன்னு யிரை!

ஆர்தான் பாடிடுவார் அன்னை அன்பினை

அள்ளிதான் குவித்து வைத்தாய் அழகு

ஆபரணமாய் தேசிய விருதுகள் தாமே

வெள்ளித் திரைதான் மறந்தி டுமோ?

வையகம்தான் மறந்திடுமோ உன் பேரை!

 

 

                    ---கே. அசோகன்,

 

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...