Skip to main content

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

 


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில்
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்ம்மா ஆனந்தம் (2)
 
வளைந்து நெளிந்து செல்லும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
 
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
                              செந்தாழம்பூவில்
 
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்
 
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
                                             செந்தாழம்பூவில்
 
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்கம் சிந்தனை
இதழில் வரும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
 
ஓடை தரும் வாடை காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
                                             செந்தாழம் பூவில்
 

 

Comments