உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை
”உயிரே! இந்த கடிதத்தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும்..அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி! ennathuli
காதல் கடித்த்திற்கு ”உ”(பிள்ளையார் சுழி) எதற்கு ? அவரோ கட்டை
பிரம்மச்சாரி
உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக்
கொண்டாயே! போதாதா?
மொட்டை மாடியில் படுத்து… ஆகாயத்தைப் பார்த்த போது நிலா
வட்டமாய் டாலடித்த்து. நட்சத்திரங்கள் கண்
சிமிட்டின.
அப்போது… ”அத்தான்..அத்தான்” அத்தான்” என்ற குல்கந்து
ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ”ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா
டல்லடித்த்து. நட்சத்திரங்கள் உன்
விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்டனவே!love
கடித்த்தில் ஆசைகளைக் கொட்டி விடத்தான் துடிக்குது
மனசு…ஆனால் இந்த கடிதம் வேறு
யார் கண்ணிலேயும பட்டு ”ஒரு தினுசு” என்று நினைத்து விடுவார்களோ பயம்தான் கண்மணி!
கவிதையில் … இச்.இச்.இச் “ சத்த்த்தோடு முத்த கவிதை எழுத நான் என்ன ”முத்து ஆனந்த் சாரா?”
இல்லை காதல் கடித்த்தையும்…நகைச்சுவையாய் எழுத பாக்கியம்
ராமசாமி போல லேடஸ்ட் நகைச்சுவை நாயகன் ” நந்து சுந்து ”சாரும் அல்ல. நான் டி.வீ சீரியல்களில் வரும் ”சீரியஸ் ஆசாமி அது ஒனக்கே
தெரிந்திருக்கும் அல்லவா?romance mood
உன்னால் என் தேகம் ”ஒல்லி குச்சி நரசிம்மன்” போல மெலிந்து விட்டது.
ஒரு நாள் நீ குடிக்க தண்ணீர் தரும்போது உன் கரம் என்
கரம் பட்டதால்… இந்த தேகம் இப்போது
விஜயகாந்த் நரசிம்மா போல தெம்பு ஏறி விட்டதடி கண்ணே!
என்னிதழ்கள் உன்னிதழ்களோடு சேர்ந்து கரும்பாய் தேனெடுக்க துடிக்கிறது. ஆனால்… ”ச்சீ போடா” என சொல்லி தாவணியை நழுவ விட்டு
நழுவி விடுகிறாயே! நியாயமா?
நமது கவிஞர் பாரதிதாசன் … காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்..மண்ணில் மா-மலையும் ஓர் கடுகாம்” என்று உணர்ந்துதானே
பாடி உள்ளார். ”இளவட்டக்கல் ஒன்றும் இமயமலை அல்ல!
…. அரைத்த மஞ்சள் பூசிய தாலியும் …அட்சதை தூவ ஆட்களும் சேர்த்து விட்டேன்… ஆட்டோவில் நீ மட்டும்
வந்து விடு அன்பே! (பி.கு ஆட்டோவில் அடியாட்கள் அனுப்பி
விடாதே)
கடிதத்தைப் படித்தாயா?
காதலர்கள்
பெரும்பாலும் ”அன்பே ஆரம்பித்து..உயிரே” என்று முடிப்பார்கள்.
நான் ”உயிரே ! என ஆரம்பித்து ”அன்பே! முடித்திருக்கிறேனே. ஆதலால் ஈருயிரும்
ஓருயிராய் கலந்து ..மூன்றாம் உயிரைப்
படைப்போம்… என் உயிர் பறித்த
மோகினியே!

Comments
Post a Comment
தங்களது கருத்து எனது ஊக்கம்