Skip to main content

வாழ வைக்கும் வார்த்தைகள் ஸ்ரீஜா பூஜா என்ற அக்கா தங்கை இருவரும் ஒரு சிற்றூரில்

வாழ வைக்கும் வார்த்தைகள் 

ஸ்ரீஜா  பூஜா,  என்ற அக்கா தங்கை இருவரும் ஒரு சிற்றூரில் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர்.
         இருவருமே பருவமெய்தி, திருமணத்திற்காக காத்து இருந்தனர்
வாழ வைக்கும் வார்த்தைகள்
.

         
  அக்கா ஸ்ரீஜா  படிப்பில் கெட்டி, பூஜா, சுமார்தான், இருந்தாலும் சுறுசுறுப்பானவள்.. இருவருக்கும் வரன் பார்த்தார்கள்.
           என்ன ஆச்சர்யம், இருவருமே ஒரே தெருவில் வசிக்கும் இருகுடும்பத்தாரின் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப்பட்டனர்..               புகுந்த வீட்டிற்கு போன பின்……பூஜாவின் கணவர்;, என்ன  பூஜா , வீட்டிற்கு ஏதேனும் தேவையா, என்று கேட்டார்;.
              “ஆமாங்க, மஞ்சள் பொடி வாங்கி வாருங்கள் என்றாள்.
           மூத்தவள் ஸ்ரீஜா வீட்டில், அவள் அத்தையிடம்  ” ஆத்தே, நம்ம வீட்ல துவரம் பருப்பு இல்லே, கடுகு இல்லே, மிளகு இல்லே. ஓண்ணுமே இல்லேஎன்று சொன்னாள்.
            அவள் அத்தை என்னடி எப்பவுமே இல்லேதானே, சில வார்த்தைகள் வாழவைக்கும் சில வார்த்தைகள் தாழ வைக்கும்  என்றதற்கு     இல்லாததை இல்லைன்னுதானே சொல்ல முடியும் என்று மாமியாரை வார்த்தைகளால் மடக்கினாள்.      சில ஆண்டுகளுக்கு  பிறகு,  பூஜாவின்  கணவன், வியாபாரத்தில் முன்னேறி, அந்த தெருவிலேயே அரண்மனை போல ஒரு வீட்டைக் கட்டி குடியேறினான். ஆதற்கு ஸ்ரீஜாவின் குடும்பத்தையும் அழைத்தனர் ;.           வீட்டைச் சுற்றிப் பார்த்த ஸ்ரீஜாவுக்கு  உள்ளுர பொறாமைத்தீ எரிய  ஆரம்பித்தது.           அவளுக்குள் பலமான யோசனை, எப்படி தங்கை வீட்டுக்காரர்; வசதியானார் இவ்வளுவு பெரிய  அரண்மனை மாதிரி  வீட்டைக் கட்டினார் ; இதை தெரிந்துக் கொள்ள வேண்டுமே என்ன வழி என்று யோசித்து  கடைசியில் ஒரு சாதுவை சந்தித்தாள்.           ”சாதுவிடம் விவரம் சொன்னாள்                                       அப்படியா, நாளைக் காலையில் உன் தங்கையையும் கூட்டிவா. அவளிடமிருந்தே அந்த விவரத்தை சொல்ல வைக்கிறேன் என்றார்
           அதைப்போலவே மறுநாள் அக்காவும்,,தங்கையும் சாதுவை சந்தித்தார்கள்.           சாதுவின் முன்னால் அக்காவும்,தங்கையும் அமர்ந்தார்கள்.
                                      முதலில் ஸ்ரீஜாவிடம் கேள்விகளை கேட்டார்; சாது.                “ஒன் வீட்டுக்காரா; திறமைசாலியா?”                  “இல்லைசுவாமி என்றாள்.                 ஓனக்கு குழந்தை இருக்கா?                 “இல்லைசுவாமி                 உனக்கு வேளைக்கு பசி எடுக்கிறதா                 “இல்லைசுவாமி
                 ஓன் மாமியார் ; ஒனக்கு அணுசரணையாக இருக்கிறாளா?                 “இல்லைசுவாமி என்றாள்.     அவளிடம் கேள்விகைள முடித்துவிட்டு,   பூஜாவிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார் சாது-                “ஒன் வீட்டுக்காரா; திறமைசாலியா?”                  “ஆமாம்சுவாமி என்றாள்.                  ஓனக்கு குழந்தை இருக்கா?                 “ஆமாம்சுவாமி                  உனக்கு வேளைக்கு பசி எடுக்கிறதா                 “ஆமாம் சுவாமி
                  ஓன் மாமியார்  ஒனக்கு அணுசரணையாக இருக்கிறாளா?                 “ஆமாம்சுவாமி என்றாள்.இப்படியாக ஆமாம்என்ற வார்;த்தைகளே பதிலாக வர...வர …. சாது மௌனமாக ஸ்ரீஜாவைப்  பார்த்து அர்த்தபுஷ்டியுடன் புன்னகைத்தார்.
           தங்கையின் முன்னேற்றத்திற்கான காரணம் எதுவென்று  ஸ்ரீஜாவிற்கு புரிந்தது.                                      

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...