Skip to main content

நல்லா இருந்த நூல்கண்டும் சிக்கலாக்கிய மியூசிக் டீச்சரும்


                                நல்லா இருந்த நூல்கண்டும் சிக்கலாக்கிய மியூசிக் டீச்சரும்
                                          
           சின்ன வயதில் இருந்தே இசையில் அலாதி பிரியம் இருந்த து. கூடவே இளையராஜா .இசையை எங்கு கேட்டாலும் மெய்மறந்து நின்று விடுவான் சங்கர்.
  நல்லா இருந்த நூல்கண்டும் சிக்கலாக்கிய மியூசிக் டீச்சரும்

           இசையை முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆசைஅது நிறைவேறாமலேயே போய்விட்டது. தனக்குத்தான் இப்படி ஆகிவிட்டது தன் பிள்ளைகளுக்காகவது இசையைக் கற்றுக்கொடுத்தால் என்ன ? என்று யோசித்தான்.
                வீட்டிற்குள் நுழைந்தவுடன், தன் இரண்டு பிள்ளைகளையும் கூப்பிட்டு, ”நான் ஒங்களை மியூசிக் கிளாஸ் சேர்த்து விடறேன்நல்லா கத்துக்கணும். இந்த அப்பாவாடோ ஆசையை நிறைவேற்றணும் என்று கேட்டுக்கொண்டான்.
                ஒன்றுமறியாத வயதில் இருந்த பிள்ளைகள் இருவரும் தலையாட்டிக் கொண்டனர்.
                மறுநாள், மியூஸிக் பள்ளிக்கு கூப்பிட்டு போனான்.
               
                ஐயா, இந்த ஏரியாவூலேயே, நீங்கதான் மியூஸிக்ல நல்ல திறமைசாலின்னு சொன்னாங்க, ஆதனால எம் பிள்ளைகளுக்கும் மியூஸிக் கத்துக் கொடுங்கோஎன்றான் சங்கர்.
                மியூஸிக் டிச்சரோ… ”அப்படியா ? ”ஒன் இரண்டு பிள்ளைகளுக்கும் மியூஸிகல ஆர்வம் இருக்காஇல்லே வேற ஏதாச்சிலும் ஆர்வம் இருக்கா-ன்னு முதல்ல தெரிஞ்சக்கணும்.
                ஆர்வமில்லாதவங்களை மியூஸிக்கல சேர்த்துட்டுஒங்களுக்கும் பண நஷ்டம், எனக்கும் நேரம் வீணா போயிடும்ஆதனால ரெண்டு பேருக்கும் ஒரு டெஸ்ட் வைக்கணும். ஆதனால நாளைக்கு கூப்பிட்டு வாங்க என்றார் மியூஸிக் டீச்சர்.
                மறுநாள் மாலை.. மியூஸிக் கிளாஸ் டீச்சர் முன்னிலையில் இரண்டு பிள்ளைகளும் அமர்ந்தனர். அவர்கள் கையில் ஆளுக்கொருநூல் கண்டினைகொடுத்தார். அது சிக்கலான நூல்கண்டு.
                     பிள்ளைகளாஇந்த நூல்கண்டு சிக்கல்களை பிரிக்கணும். ஆனா நுலை அறுந்து விடாம பிரிச்சி யார் முதல்ல தருவீங்களோ. ஆவங்க மியூஸிக் கிளாஸ் சேரலாம் என்று கன்டிஷன் போட்டார்.
                     பெரியவன்நூல் கண்டினை வாங்கி திக்குதெரியாமல் திண்டாடி, அதனை அறுத்துஒரு வழி பண்ணிவிட்டான். சிறியவனோ நின்றுநிதானமாக , ”சிக்கல் எங்கு ஆரம்பிக்கிறது, என்று ஆராய்ந்து, அறுக்காமல் பிரித்து கொடுத்தான்.
                     சிறியவனை நாளை முதல் மியூஸிக் கிளாஸ் வரலாம் என்றார்.
                     இப்போதுசங்கருக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்துஸார், மியூஸிக் கிளாஸ்க்கும், சிக்கலான நூல்கண்டுக்கும். என்ன ஸார் சம்பந்தம், இதுக்கும்..அதுக்கும் முடிச்சு போட்டு ஒண்ணும் புரியலேயே என்றான்.
                     மியூஸிக் என்பது ஒரு நுட்பமான கலை, அதில் ஆர்வமும் மிகுந்த பொறுமையோது கவனம் செலுத்துவம் அவசியமான ஒன்றுசிக்கலான நூல்கண்டினை பிரிப்பது என்பது நிறையபேருக்கு பொறுமை இருக்காது, ..நூலினை அறுத்து உடன் முடித்து விட நினைப்பார்கள். அதனால்தான் ரெண்டு பிள்ளைகளையும் சோதித்தேன். இதுதான் நான் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடைமுறை என்று முடித்தார்.
                     சரிங்க ஸார்,  சிக்கலான நூல்கண்டு கடைல எங்கேயாவாச்சும் விக்குதா? இல்லேஅப்படின்னு கேட்டவுடன். சிரித்து கொண்டே  நேத்து ராத்திரி நான்தாம்பா , புது நூல்கண்டுகளை வாங்கி வந்து சிக்கல்களாக்கினேன் என்றார்.
                     அப்போதுதான்பிள்ளைகள் மேல் நமது ஆசைகளை திணிக்க கூடாது என்ற ஞானோதயம் சங்கருக்கு ஏற்பட்டது.




Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...