நெஞ்சில்
இளநீரின் சுவையை விட இனிதாய் இனித்தாள்
          “அக்கவுன்டன்ட்”என்ற
பிளாஸ்டிக் போர்டின் அறையில், உட்கார்ந்து
இருந்த இராஜன் முகம் கவலையில் வாடி இருந்தது, அவனுடைய மனமோ அலைப்பாய்ந்து எங்கோ வெளியே பறந்து கொண்டிருந்தது. ENNATHULI 
![]()  | 
நெஞ்சில் இளநீரின் சுவையை விட இனிதாய் இனித்தாள்  | 
     “எம்.டி. யிடம்
கேட்கலாமா?
     கேட்டு இல்லையென்று சொல்லி
விட்டால்….. என்று மனசுக்குள் தனக்கு தானே பேசிக்கொண்டு
எம்..டி.யின் கேபின் கதவை மெல்ல தட்டினான். 
     “யெஸ், கம்
இன்” என்ற
குரல் ஒலித்தவுடன் உள்ளே சென்ற ராஐன் தயங்கி...தயங்கி மெல்ல தலையைச் சொறிந்தான்
     “ஏன்ன விசயம்
மிஸ்டா;
ராஜன்”சொல்லுங்க… டைமை
வேஸ்ட் பண்ணாதீங்க”
     ஸார், என்னோட மாமானாருக்கு ஒரு சின்ன ஆபேரசன்;;;;……..அதுக்கு பத்தாயிரம் கேட்டு ஊர்ல இருந்து லெட்டர்
 வந்திருக்கு…….அதான் முடிப்பதற்குள்  என்ன வெளையாடிருங்கீளா ராஐன் (மிஸ்டா; காணாமல் போனது)
…..பணம் என்ன கொட்டிக் கிடக்கவா இருக்கு… இந்த கம்பெனி ரன் பண்ணவே பேங்கல கடன் வாங்கி ஓ.டி-ல இருக்கு….பேங்க மேனேஐh; அப்ப….அப்ப….
நோட்டிஸ் அனுப்பிடறார்
     இதுல….நீங்க
கடன் வேற கேட்கறீங்க….முதல்ல வேலையைப் பாருங்க” இல்லைன்னா….வேற கம்பெனியப் பாருங்க…...வந்துட்டாங்க கடன் கேட்டு
…
     மனைவியின் கேள்விக்கு பதில்
என்ன சொல்வது என்று முழித்து நாற்காலியில் உட்காhந்தான் ராஜன் 
     அரை மணி நேரம் ஆகியிருக்கும் “எம்.டி-ரூமிலிருந்து
இன்டர்காமில் அழைப்பு வர….என்னவோ….ஏதோ
என்று பதறிப் போனான்.          
 “பிரிப்கேஸ்
எடுங்க” இந்தாங்க
புடிங்க...கட்டுக்கட்டாய் …இலட்ச கணக்கில் கைகளில் திணித்து
அடுக்கச் சொன்னார் ஓட்டல் வசந்தாவில்
ரூம் நெம்பர் பத்ததொன்பதில் இருக்கிற இராம்லால் சேட்கிட்
இந்த “முப்பது  இலட்சத்தை” கொடுத்துட்டு
வாங்க...ரொம்ப அவசரமாம்…இப்பத்தான்
போன் வந்துது.
          நாலு மணிக்கு மும்பை போகணுமாம், “குயிக், குயிக்” என
விரட்டினார்…..அவரின்
விரட்டலில்...யமாஉறா விர்ரென பறந்தது.
ரிசப்சனில் விசாரித்து ...கதவைத் தட்டி”இராம்லால்
சேட்” முன்னால்
ஆஜராகி.” “முப்பது இலட்சத்தை” எண்ணி
கொடுக்கையில் கவனித்தான்…ஒரு ஐநூறு
ரூபாய் கட்டு அதிகமாக இருந்ததை...அப்படியே ஒதுக்கினான்.
          “மனம்
இப்போது குரங்காய் தாவியது…….எம்.டி. சோதிக்கிறாரோ, இல்லை தமக்கு கடவுளா உதவி
செஞ்சிருக்காரா”
என்று ஏகப்பட்ட எண்ணங்களுடன் மனசு அலைப்பாய்ந்தது ஆடிக்காத்தில்
அம்மி பறந்ததைப் போல”
     அவசர.. அவசரமாக வந்ததில் ஏக
டென்சன்….கூடவே நா...வறண்டது..
     கூல்டிரிங்க்ஸ.;
கடையைத் தேட அங்கே
     “ஒரு வயதான அம்மா” இளநீர்
விற்றுக் கொண்டிருந்தாள்
     .இந்தாம்மா ஒரு இளநீர் குடு என்று கேட்டு வாங்கி குடித்து விட்டு…...ஐநூறு ரூபாய் தாளை நீட்டு சில்லரை வாங்காமலே யமாஉறவைக் கிளப்பினான்
     கொஞ்சம் தொலைவு செல்வதற்குள்…...ஒரு ஆட்டோ இவன் பைக்கின் முன்னால் பாய்ந்து நின்றது”
     “இந்தாப்பா மீதி” ஒங்-காசு
எனக்கு வேண்டாம்...ஒழைக்கிற காசே ஒட்டமாட்டேங்குது…இதுல…இதுவேறயா...என்று திருப்பித் தந்தாள்.
     “ஆபிஸ் சென்ற ராஜன்”எம்.டியிடம்
….சேட்டுகிட்ட ரூபாயை குடுத்துட்டேன்…..இந்தாங்க
இரசீது என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே  “என்ன ராஜன்...வேலையைப்
பாருங்க என கடுகடுவென இருந்ததில் கோபம் குறையவில்லை என அறிந்தான்
     அது இல்லை எம்டி ஸார்” சேட்டுக்கு
கொடுக்கச் சொன்ன முப்பது இலட்சத்தோட……இந்த
ஐநூறு ரூபாய் கட்டு அதிகமா இருந்துச்சு….என திருப்பித் தந்தான்.
“வெல்டன்
மிஸ்டர்
ராஐன்”
(மிஸ்டர் மீண்டும் ஒட்டிக்கொண்டது அவா;
வார்த்தையில்) “நீங்க ஒங்க
வேலையைப் பாருங்க” என்று
வார்த்தைகளில் காதில் வாங்கிக் கொண்டு சுரத்தில்லாமல்
இருக்கைக்கு திரும்பினான் 
     திரும்பவும்….அரைமணி நேரம்...கழித்து இன்டர்காமில்
எம்.டி-யிடமிருந்து அழைப்பு…..வர      “ஸார்”….. என்பதற்குள்…
கைகளை நீட்டி… கைகளை குலுக்கி…”மாமானாரை
நல்லா கவனிச்சுக்கங்க”   இந்தாங்க…….என்று ஒருபெரிய கவரை கைகளில் திணித்தாh;” 
          இருக்கைக்கு வந்து…..கவரைப் பிரித்து பார்த்ததில்….ஒரு பாராட்டு பத்திரம் ….கூடவே ரூபாய் பத்தாயிரமும்”
                   இந்த பாராட்டு பத்திரமும்
பத்தாயிரம் பரிசு பெறுவதற்கு காரணமாகவும் முன்மாதிரியாக இருந்த இளநீர் விற்ற பெண்மணி
நெஞ்சில் இளநீரின் சுவையை விட இனிதாய் இனித்தாள்.

நேர்மை எப்போதுமே ஏழையாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteவருகைக்கும் மேலான கருத்திற்கு தலை வணக்கம் மிக்க நன்றி
Deleteஅருமை...
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete