Skip to main content

அழகான பெண்களின் விரலுக்கு மெகந்தி ஏன் இடுகிறார்கள் சூட்சும ரகசியங்கள்


            மருதாணி(மெகந்தி)
              பெண்கள் என்றாலே அழகுதான். அதைவிட அவர்களின் குணநலன்கள் மிகவும் அழகு. அவர்களின் பொறுமைதான் மிகப்பெரிய அழகு 
htpps://ennathuli.blogspot.com
அழகான பெண்களின் விரலுக்கு மெகந்தி ஏன் இடுகிறார்கள் சூட்சும ரகசியங்கள் 

அந்த அழகோடு காணும் பெண்களின் விரல்கள் வெண்டைக்காய் மாதிரி இருக்கும். என்பார்கள். அதனால்தான் லேடிஸ் பிங்கர் என்பார்கள். அந்த விரல்களின் நகங்களில் நெயில் பாலிஷ் வண்ண வண்ண நிறங்களில் பளிச்சிடுவார்கள். பார்க்க அழகாய் இருக்கும். ஆனால் அவை ரசாயணக் கலவை ஆகும். நம் முன்னோர்கள் பெண்களின் கைகள் மற்றும் விரல்களுக்கு அழகு சேர்க்க மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசி இரவில் படுத்து காலையில் எழுந்து கைகளை கழுவினால் கைகள் செக்க சிவந்து வண்ணமயமாய் காட்சியளிக்கும்.அழகான பெண்களின் விரலுக்கு மெகந்தி ஏன் இடுகிறார்கள் சூட்சும ரகசியங்கள் ennathuli
          இப்போதோ பெண்களின் கைகளில் விதவிதமாக மெஉறந்தி வரைய டிபார்ட்மென்ட் ஸ்டோர் வாசல்களில் இருக்கிறார்கள். அந்த மெஉறந்திக்குள் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது. பெண்கள் பயப்படாமல் இருப்பதற்கும், எதிர்மறை ஆற்றல்கள் அணுகாமல் இருப்பதற்கும் அந்த கால மக்கள் மெஉறந்தி எனப்படும் மருதாணி இலைகளை அரைத்து கைவிரல்களில் இட்டுக் கொண்டனர். பெண்களின் உடலுக்குள் விரல்நுனிகளின் வழியாகத்தான் எதிர்மறை ஆற்றல்கள் புகுந்து விடுகின்றன. அவற்றை தடுக்கவே மருதாணி கைவிரல்களில் இடுவதைப் பழக்கமாக்கி கொண்டனர். இப்போது அது பேஷனாகி விட்டது.
                  
          இரத்த சுத்தி
          நமது உடலின் நாடி நரம்புகளில் ஓடும் இரத்தம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தமாகும்.
          இரத்தம் கெட்டு விட்டதற்கு அடையாளமாய் கை கால் விரல்களில் அடையாளம் கண்டு கொள்ளலாம் என்று முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்படிப்பட்ட இரத்தம் சுத்தமாக இருக்கிறதா..useful tips
          உடலில் இரத்தம் கெட்டுவிட்டால் மாற்று இரத்தம் உடலில் செலுத்த வசதியுள்ளவர்கள். ஒரு சிலர் பெரிய மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற பணத்தை செலவு செய்வார்கள்  ஆனால் எளிய முறையில் சிக்கன செலவில்இரத்த த்தை சுத்திகரிக்க தினமும் சிறிய வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) சிறிதளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகவும், சீராகவும் ஓட்டம் பெறும். என்ன நாற்பத்தெட்டு நாள் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு விட்டு யார் பக்கமும் போகாமல் கொஞ்சம் நேரம் தள்ளி நிற்க வேண்டும் அவ்வளுவுதான்.
                             பிரம்மா
          மூம்மூர்த்திகளில் படைப்பு கடவுளான பிரம்மாவிற்கு நான்கு தலைகள் உள்ளதாக புராணங்கள் கூறுகிறது. அது ஒரு உருவகமே தவிர உண்மையில்லை. எந்த ஒரு மனிதரென்றாலும் அவனுக்குள் நல்ல குணங்களும் தீய குணங்களும் கலந்தே இருக்கும். இது உலக நியதி.  motivated stories
              பள்ளி இறுதி வகுப்பில் பாஸ் செய்து விட்டாலே நாம் வசிக்கும் தெருவே நம்மைக் கவனிக்கிறதா என்று பார்த்து நம் தலையைக் கர்வமாக வைத்துக் கொள்வோம். அதுதான் தலைக்கனம் என்பது.
              நமக்குள் இருக்கும்நான்என்ற ஆணவம் பெருகும்போது ஏதாவது ஒரு இன்னல் வந்து நம்மை அழ வைக்கும். அதே போல காமியம். மாயை, திரோதை மாமாயை ஆகிய குணங்கள்தான் அந்த நான்கு தலைகள்
          அந்த நான்கு தலைகளின் ஒன்றான ஆணவத்தைக் கொய்வதைத்தான் சிவன் பிரம்மாவின் தலையைக் கொய்தார் என்று புராணம் கூறுகிறது.
     ...
மும்மூர்த்திகள் எனப்படும், சிவன், விஷ்ணு, பிரம்மாஎல்லோரும் நமது உடம்புக்குள்ளேயே இருக்கிறார்கள்.
              நம் உடம்பில் நீர்த் த்துவமாக இருப்பவர் விஷ்ணு. ஆதலால்தான் அவர் கடலில் பள்ளிக் கொண்டிருப்பது போல சித்தரித்து இருப்பார்கள். அதே போல விஷ்ணு  குளுமையாக இருப்பவர் சாந்த சொருபர்
              அண்ட சராசம் எங்கும் அணுத்துகள் இயங்கி கொண்டே இருப்பதைத்தான் நம் முன்னோர்கள் பிரம்மா என்று அழைக்கிறார்கள். அணுத்த்த்துவமாக இருப்பவர் பிரம்மா.அந்த அணுவும் நம் உடலுக்குள் இயங்கி கொண்டே இருக்கிறது.
              வெப்பமாக இருப்பவர் சிவன். தீ த்துவம். இவர் இருப்பது  பனிகள் சூழ்ந்த மலையென்றாலும்….. குளிராக இருந்தாலும்ஐஸ்கட்டிகளும் உள்ளுக்குள் ஒரு வெப்பத்தை மறைத்தே வைத்திருக்கிறது. நம் வீட்டில் கூட பெரியவர்கள் ஐஸ் சூடு என்பாரகள்.

,.                       தியானம் கைகூட
           அதிகாலை மணி நான்கு முதல் ஆறு வரை பிரம்ம முகூர்த்தம் என்பார்கள் அந்த நேரத்தில் எழுந்திருக்கிறீர்கள் சற்று தியானம் செய்தால் மனம் அமைதியாய் இருக்கும் என்று எண்ணி தியானத்தில் அமர்கிறீர்கள். அந்த நேரத்திலும் உங்கள் , மனம் ஒருநிலைப் படவில்லையா?astrology
       கவலை வேண்டாம். சிவப்பு கனகாம்பரம் பூக்கள் சிறிதளவு எடுத்து இருகரங்களிலும் வைத்து கண்மூடி தியானம் செய்து பாருங்கள்.. மனம் தன்னால் ஒருநிலைப்பட்டு விடும்
              
                        வீட்டில் எதிர்மறை ஆற்றலா?
          நம் வீடு காற்று வரும்படியாக காற்றோட்டமாகவும்… சூரியனின் கதிர்கள் விழும்படியாக இருந்தால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் மிகுந்து இருக்கும். சில வீடுகளில் கதவு… ஜன்னல்களை மூடியே வைத்திருப்பார்கள்.
          அப்படிப் பட்ட வீடுகளில் எதிர்மறை ஆற்றல்கள் கண்ணுக்கு புலப்படாத வகையில் மேலோங்கி இருக்கும். ஆதலால்தான் அந்த வீட்டில் சண்டை ச ச்சரவு வாக்குவாதம் நிம்மதியின்மை அதிகமாய் இருக்கும்.ennathuli
              அந்த எதிர்மறை ஆற்றலை எப்படி விரட்டுவது. அதற்குதான் வீட்டில் சாம்பிராணி தூவி புகைக்காட்டுவார்கள். மஞ்சள் தண்ணீர் அல்லது கடல் நீர் தெளிப்பார்கள்.
          கடல் நீர் கிடைக்காதவர்கள் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பைப் போட்டு கரைத்து வீடுகளில் தெளிப்பார்கள்.
              இன்னொன்றும் செய்தால். அது என்னவென்று கடைசி வரியில் பார்ப்போமே.
.         அந்த பூக்கள்  மிகவும் வாசனையாக இருக்கும். சிலர் தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு வைத்துக் கொள்வார்கள் மணமாகவும் இருக்கும் உடல் சூட்டைத் தணிக்கவும் செய்யும்

          அந்த பூக்கள் சின்னஞ்சிறியதாய் இருக்கும். அந்த பூக்களை மாலையாக கோர்த்து வீட்டு நுழைவாயிற் கதவில் போட்டு விட்டால் . எதிர்மறை ஆற்றல்களை அந்த பூக்கள் கிரகித்து கொள்ளும். வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாத த்திற்கு ஒரு முறையோ இதை செய்யலாம். அதன் பேர்தான் ”மகிழம்பூ”

              வீட்டு வாயிலில் ”மகிழம்பூ மாலைச் சூட்டி மகிழ்வோடு உங்கள் இல்லத்தில் இருக்கலாமே!”
         


Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

நானெழுதும் பாடல்களில் நீ

 

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...