Skip to main content

யானை மொழி-சிறுகதை

யானை மொழி-சிறுகதை
                                அடியே போக்கத்தவளே, இவ்ளோ படிச்சுட்டு, அந்த வேலைக்கு போறேன் சொல்றீயே, ஒனக்கு பிராந்தோஎன திட்டினாள் அம்மா. Ennathuli
                                   சாதாரண வேலையா அது? ஒரு பெரிய  உருவத்தைக் கட்டி மேய்க்கிற வேலை. ஆடு, மாடு கூட மேய்ச்சிடலாம். ஆனா. இது கட்டுக்கடங்காத ஒண்ணு ஆச்சே, அம்மாவின் கவலையை அலட்சியப்படுத்தி விட்டு தயாரானேன்.


                                   யானை மேய்க்கிற வேலைங்க அது. தைத்தான் யானைப் பாகன் சொல்றாங்களே!. நம்ம கண்ணுக்கு அது பெரிசா தெரியும். அதன் சிறிய கண்களுக்கு நாம எப்படி தெரிவோம். அது சொன்னாத்தான் தெரியும்.                      யானைப் பாகனிடம் போய் கேட்டதற்குஇன்னாம்மா! நாங்களே பயப்படறோம். அசந்தா ஆளை மெதிச்சு போட்டுடும். ஏப்ப அமைதியா இருக்கும். ஏப்ப மதம் பிடிக்கும்-ன்னு யாருக்கும்மா தெரியும். போய் வேற வேலையைப் பாரும்மாவிரட்டினான் ஒரு பாகன்.
                                   விடாப்பிடியாய் இருந்ததில் இன்னொரு பாகன் அசைஞ்சு கொடுத்தான். Short stories
                                   முதல் நாள் யானையிடம் கூட்டிப்போனான்.  தொட்டுப் பாh;க்க சொன்னான்.
                                   மனதுக்குள் கிலி இருந்தது, இருந்தாலும், அதனருகில் சென்று தொட, அதுவோ திரும்பி நின்று  கொண்டது. ன் கண்ணுக்கு பிரம்மாண்டமாய் தொpந்தது, அதன் கண்ணுக்கு நான் எப்படி தெரிந்தேன் என்பது அதற்குத்தானே தெரியும். இன்னும் யானை மொழி எனக்கு தெரியாது அல்லவா?
                                   ஒரு வாரம் விடாமல், வாஞ்சையாய் தடவி..தடவி கொடுக்க ஒரு நாள் என் பக்கம்  தலையை திருப்பியது.  பாகன் சொன்னான், “ஒன்னைய பிடிச்சு போச்சு போலே இருக்கேன்னு ஆச்சா;யமானான்.
                                   தொட்டுப் பழகியவுடன், அதனுடன் பேசும்மாஎன்றான்.
                                   நானும் பேசினேன். அப்படி ஒங்க மொழில பேசினா புரியாது. யானைகளுக்கு தனி மொழி இருக்குது. ஆத சொல்லித்; தாரேன். அதுல பேசுங்கோஎன்றான்.  அதையும் அவனிடம் கற்றுக்கொண்டேன்.  தண்ணீர் இருக்குமிடத்தை ஐந்து கிலோமீட்டா; தூரத்திலேயே கண்டுபிடித்து விடும். இப்படி அவனிடம் நிறைய வியங்களைக் கற்றுக் கொண்டேன். Motivation stories
                                   யானையிடம், அதன் மொழியிலேயே பேசி...பேசி…. ஏன்னிடம் இயல்பாய் பழக ஆரம்பித்தது.   அப்புறம் என்ன? சவாரிதானே யாருக்குத்தான் யானை சவாரி பிடிக்காது.
                                   நானும்,  பாகன் உதவியால் யானையின் மேல் தனியாக ஏறி உட்கார அசைஞ்சுஅசைஞ்சு நடந்தது. ஆர்வக்கோளாறில் அங்குசத்தால தவறுதலாக குத்த…. தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. பயம் என்னை கௌவிக்கொண்டது. ஆப்படியே அதன் மேல் படுத்தபடியே பிடித்துக் கொண்டு அமைதியாய் இருந்து வாஞ்சையாய் தடவிக் கொடுத்தேன். அமைதியானது,  அங்குசத்தை விட அன்புக்கு கட்டுப்பட்டது.
                                  அவ்வளவு பெரி ய உருவத்தை எப்படி நீ கட்டுக்குள் கொண்டு வந்தேன்னு எங்க அம்மா கூட ஆச்சா;யப்பட்டாங்க.  கேலி செய்தவா;கள் மூக்கின்மேல் விரல் வைத்தனா;.
                                  கடின உழைப்பு, தன்னம்பிக்கை,தைரியம் இருந்தா, யானை இல்லே, மலையைக் கூட ஆசைச்சிடலாம்லேஎல்லோரும் பெரிய யானையைக் கட்டிப்போட்ட பெரிய மனுசி நீதான் சொன்னாங்க
                                  அட இவ்ளோ நேரம் சொல்லலீயா நான் யாருன்னு?
                                  ன் ஊர் கேரளத்து பக்கம், படிப்பு ஒண்ணும் பெரிசா இல்லே சயின்டிஸ்டுதானயானைக்கிட்ட பேசி..பேசிங்க் இருங்க என் பேரு நியா நம்பூதிரிங்ங்கஇந்தியாவின் முதல் பெண் யானைப் பாகன் நான்தாங்கோ
                                 யாராச்சும் வர்றீங்களா. நான் கத்துத் தாரேன் யானை மொழி



Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!