Skip to main content

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

 
மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு
சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)
 
ஆத்துரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
 

தண்ணிய ஏத்தம் பிடிச்சு
இறைச்சி போடு செல்லக்கண்ணு
நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)
 
கருத நல்லா விளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி  அளந்து போடு செல்லக்கண்ணு
 
                          ஏன்றா பல்லைக் காட்றீங்க
                          அட வேலையைப் பாருங்க
கருத நல்லா விளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி  அளந்து போடு செல்லக்கண்ணு
 
பொதிய ஏத்தி வண்டியில
பொள்ளாச்சி சந்தையில   ஆஆஆஆஆஆஆ(2)
 
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்துப் போட்டு பணத்தை எண்ணு செல்லக் கண்ணு(2)
 
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு (2)
 
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
 
                                  (மணப்பாறை மாடு கட்டி )
 
திரைப்படம் : மக்களை பெற்ற மகராசி
பாடலாசிரியர் : மருதகாசி
இசையமைப்பாளர் : கே.வி.மகாதேவன்
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
 
x

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

உயிர் பறித்த மோகினியே! – காதல் கதை

    உயிர் பறித்த மோகினியே ! – காதல் கதை                 ” உயிரே ! இந்த கடித த் தைப் பிரித்ததும் உன் கூரிய விழிகள் மேலும் கீழும் .. அங்கும் இங்கும் சுற்றும் விழிச் சுடரே என்பது போல இருக்கும் என்பது என் மனக்கண்ணில் ஓடுதடி ! ennathul i               காதல் கடித்த்திற்கு ” உ ”( பிள்ளையார் சுழி ) எதற்கு ? அவரோ கட்டை பிரம்மச்சாரி           உன் உதட்டு சுழிப்பினல் என்னை சுனாமியாய் சுருட்டிக் கொண்டாயே ! போதாதா ?           மொட்டை மாடியில் படுத்து … ஆகாயத்தைப் பார்த்த போது நிலா வட்டமாய் டாலடித்த்து . நட்சத்திரங்கள் கண் சிமிட்டின . அப்போது … ” அத்தான் .. அத்தான் ” அத்தான் ” என்ற குல்கந்து ருசியாய் குரல் எழுப்பி விட்டு …. கீழே ஓடிப் போய் ஜன்னலில் ஒளிந்து கொண்ட போது ” ஜன்னல் நிலாவாய் தெரிந்து … வானத்து நிலா டல்லடித்த்து . நட்சத்திரங்கள் உன் விழிகளின் காந்தம் பார்த்து அவசர அவசரமாக ஒதுங்கி கொண்...