Skip to main content

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

 
மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு
சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)
 
ஆத்துரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
 

தண்ணிய ஏத்தம் பிடிச்சு
இறைச்சி போடு செல்லக்கண்ணு
நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)
 
கருத நல்லா விளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி  அளந்து போடு செல்லக்கண்ணு
 
                          ஏன்றா பல்லைக் காட்றீங்க
                          அட வேலையைப் பாருங்க
கருத நல்லா விளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி  அளந்து போடு செல்லக்கண்ணு
 
பொதிய ஏத்தி வண்டியில
பொள்ளாச்சி சந்தையில   ஆஆஆஆஆஆஆ(2)
 
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்துப் போட்டு பணத்தை எண்ணு செல்லக் கண்ணு(2)
 
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு (2)
 
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
 
                                  (மணப்பாறை மாடு கட்டி )
 
திரைப்படம் : மக்களை பெற்ற மகராசி
பாடலாசிரியர் : மருதகாசி
இசையமைப்பாளர் : கே.வி.மகாதேவன்
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
 
x

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!