Skip to main content

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

 
மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு
சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)
 
ஆத்துரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
 

தண்ணிய ஏத்தம் பிடிச்சு
இறைச்சி போடு செல்லக்கண்ணு
நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)
 
கருத நல்லா விளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி  அளந்து போடு செல்லக்கண்ணு
 
                          ஏன்றா பல்லைக் காட்றீங்க
                          அட வேலையைப் பாருங்க
கருத நல்லா விளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி தூத்தி  அளந்து போடு செல்லக்கண்ணு
 
பொதிய ஏத்தி வண்டியில
பொள்ளாச்சி சந்தையில   ஆஆஆஆஆஆஆ(2)
 
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்துப் போட்டு பணத்தை எண்ணு செல்லக் கண்ணு(2)
 
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு (2)
 
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
 
                                  (மணப்பாறை மாடு கட்டி )
 
திரைப்படம் : மக்களை பெற்ற மகராசி
பாடலாசிரியர் : மருதகாசி
இசையமைப்பாளர் : கே.வி.மகாதேவன்
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
 
x

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !

தட்சினை ஒரு பக்க கதை

  கழுத்துல பொ p ய டாலா ; பதித்த தங்க செயின்இ நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க… “தட்டுல தட்சிணை போடுங்கோ”   “தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும். .                                             இந்தக் குரல் கேட்டு…. “ஏன்டி பங்கஐம் “குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கா h;. அவா ; ஒரே   பையன் அமொ p க்காவு+ல செட்டில்ட்இ கணிசமான பணம் மாசாமாசம் அனுப்பிடறான்.. அப்படி இருந்தும்… குருக்கள் அல்பமா “தட்டுல தட்சிணை போடுங்க” கேட்கறது நல்லாவா இருக்கு” என கேட்டாள் கல்யாணி.                                              அடி...