Skip to main content

மகிழ்ந்தது மூங்கில்

 


அலறியதுஅரற்றியது

அழுது புரண்டது

ஐயோவெட்டுகிறானே!

என்ன செய்வதாய் உத்தேசமோ?

 

பள்ளி பிள்ளைகளை

பயமுறுத்தவோ?

சாக்கடை சகதிகளை

சுத்தம் செய்யவோ?

புலம்பிய பொழுதினில்

 

தணலில் வாட்டினான்!

கொடுமைக்காரா!

குமுறியது!

 

துளைகள் பல இட்டான்

துவண்டு ”படுபாவி” என சபித்தது

 

அலறி முடிக்கும் தறுவாயில்

அவன் கையிலொரு

அழகியதொரு புல்லாங்குழல்!

 

கிள்ளிப் பார்த்து கொண்டது

ஆம்…. நான் வாழ்கிறேன்

இனிய இசையாக என்றுமே

என மகிழ்ந்தது

மூங்கில்

 

 

Comments

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே   பக்கங்களை எச்சில் தொட்டு புரட்டுவது சிலரின் பழக்கம் கன்னியின் இதழ்கள் எச்சில் ஆக்குவது முத்தமாகும்   புத்தகம் நூறு ஆசிரியருக்கு இனணயாம் கன்னியும் நூறு ஆசிரியருக்கு இனணயே கலவிக் கல்வியில்   அச்செழுத்துக்கள் கண்ணைக் கவரும் “இச்”செழுத்துக்கள் கன்னத்தைக் கவருமே                

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!

ஜோக்கீரர் – நகைச்சுவை கதை

                     ஜோக்கீரர் – நகைச்சுவை கதை               ” ஆயிராமாச்சே .. ஆயிரமாச்சே ! ” சோக்கா ! சோக்கா ! எனக்கே கிடைக்கணும் .. எனக்கே கிடைக்கணும் . வர மாட்டீயே எங்கேய்யா போனே !