Skip to main content

தெவிட்டாத மீன் குழம்பே நீதானடி!

 


தெவிட்டாத மீன் குழம்பே நீதானடி!
நீதானடி தெவிட்டாத மீன் குழம்படி
 
கண்ணே உன் விழிகள் ரெண்டும்
திருக்கை மீன் வாலாச்சுதடி
திகைத்து என் பேச்சு நின்றதடி
தெவிட்டாத மீன் குழம்பு நீதானடி
 
 
ஏலே லே லே ஏலே லே லே ஐலேசா
ஏலே லே லே ஏலே லே லே ஐலேசா
கன்னங்கள் ரெண்டும் அழகு
சங்கராமீன்கள் வண்ணம் தானடி
சபாஷ் என்றே என் நாவில்
வார்த்தைகள் வந்து விழுந்ததடி
 
தெவிட்டாத மீன் குழம்பே நீதானடி!
நீதானடி தெவிட்டாத மீன் குழம்படி
 
நெளிகின்ற உன்னிடுப்பு ஆனதடி
நெத்திலி மீனாட்டம்
நீ வைக்கும் குழம்போ இனிக்குதே
தேனாட்டம் ச்சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே
 
ஏலே லே லே ஏலே லே லே ஐலேசா
ஏலே லே லே ஏலே லே லே ஐலேசா
 
கருப்பான கூந்தல் பேர் சொல்லுதடி
கருப்பு மோலி மீனைத்தானே
சிக்கி கொண்டேனே நான்  அந்த
வலையில் தானே .சிங்காரியே
 
கடலில் இந்நாள் வரை கண்டதில்லை
கடல் கன்னி தனை காதலியே
உடல் பொருள் ஆவி அனைத்துமே
ஒப்படைத்தேன் உன்னிடமே மீனே!
 
தெவிட்டாத மீன் குழம்பே நீதானடி!
நீதானடி தெவிட்டாத மீன் குழம்படி
ஏலே லே லே ஏலே லே லே ஐலேசா
ஏலே லே லே ஏலே லே லே ஐலேசா

 

 

 

 

 

 

 


Comments

Popular posts from this blog

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் senthazam poovil lyrics tamil

  செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம்பூவில் பூ வாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்ம்மா ஆனந்தம் (2)   வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ   ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள்                               செந்தாழம்பூவில்   அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்   பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி                       ...

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி

  மார்போடு சாயுறாளே அத்தை மகள் ennathuli எண்ணத்துளி