Skip to main content

தமிழாலே ஈர்க்க

தமிழாலே ஈர்க்க
கதிரவனும் மேற்றிசையில் சாய
கன்னியவள் காதலனை ஆய
மதியொளியும் நிலந்தனில் பாய
மன்னவன் மார்பில் சாய
       வழிப் பார்த்திருந்தாள்!
       விழி பூத்திருந்தாள்!

காலொலி செவிகளில் கேட்க
காளையவன் தழிழாலே ஈர்க்க
தோள்வலியோன் இருவிழியாள் பார்க்க
துடியிடையாள் நிலத்தினை நோக்க
       கன்னம் சிவப்பேறஇரு
         கனியிதழ்களும் வெளுத்தனவே!

சோலைக்குயில் மரத்தினிலே இரண்டு அந்தசோடிகளின் காதல்லீலைக் கண்டு
பாளைதனில் ஒளிந்தனவே ஒண்டி
அன்பு பெருக்கினாலே மனம்சுண்டி
            நம்மைக் கவர்ந்தன-உடன்
            தம்மை மறந்தனவே

மாலைமங்கும் பொழுதினில் மன்னன்! – 
முத்தமழைகளைப் பொழந்தாலோ
கன்னல்மாலையென மார்பில் படர்ந்தாள்காதல்
மயக்கமதில் லீலைகளைத் தொடர்ந்தாள்    
        ஈருடலும் ஆங்கேகலவியில்
            ஓருடல் ஆனதுவே!





Comments

  1. கவிதையை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு மகிழ்ச்சி

      Delete
  2. அழகான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உரித்தாகட்டும்

      Delete

Post a Comment

தங்களது கருத்து எனது ஊக்கம்

Popular posts from this blog

கன்னியும் புத்தகமும்

  கன்னியும் புத்தகமும்   புத்தகம் இதழ்களால் ஆனது கன்னியின் இதழ்களால்   ஆனதே  

மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி

  மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடுபடு செல்லக்கண்ணு(2)   ஆத்துரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு   தண்ணிய ஏத்தம் பிடிச்சு இறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டு போடு சின்னக்கண்ணு(2)   கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு                             ஏன்றா பல்லைக் காட்றீங்க                           அட வேலையைப் பாருங்க கருத நல்லா விளைய வச்சி மருத ஜில்லா ஆள வச்சி அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி   அளந்து போடு செல்லக்கண்ணு   பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையில ...

மீராவின் காதலிலே காதல் கவிதை

மீராவின் காதலிலே காதல் கவிதை ennathuli   மீராவின் காதலிலே   காரத்திலே ஓர்சுவை உண்டு கற்கண்டிலே இனிப்பு உண்டு சீரகத்திலே செரிக் கின்ற சீர்மிகு ஆற்றல் உண்டு சீரதிகம் கேட்கும் அண்களின் சிந்தையிலே சோம்பல் உண்டு மீராவின் அன்புக் காதலிலே மெய்மறக்கும் கண்ணன் உண்டு கம்பனவன் சொல் நயத்தில் கவிகள் பலவும் உண்டு கொம்பனவன் யானையிடம் மூர்க்க குணமும் உண்டு நம்பும் பேர் வழிகளுக்கு நிச்சயம் கடவுள் உண்டு வம்பளக்கும் மாந்தர்களுக்கு கொட்டு பல உண்டு!